பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


அல்லா! வென்றார் அம்மொழியில் அடங்கி யிருந்த தென்கொல்லோ பொல்லா மனிதன் நடுநடுங்கிப் போட்டு விட்டான் வாளதனை விழுந்த வாளை எடுத்தந்த விந்தைப் பெருமான் தீயோனை அழுந்த நோக்கி உனைக் காப்பார் யாரோ??? என்று கேட்டனரே. யோரும் இல்லை உமையல்லால் ஐயா? என்று பயத்தாலே திரும் நிலையில் உள்ளவனைத் திருவார் நபிகள் கண்டாரே அருளும் நாயன் தயவாலே அன்பா உனை நான் மன்னித்தேன் இருளும் எண்ணம் விலக்கிடுவாய் இனிது வாழ்வாய் செல்:என்றார் கொல்ல வருவார் தமைக்கூடக் குளிர்ந்த அருளால் மன்னிக்கும் நல்ல உள்ளம் படை த்தவரே நாயன் தூதர் அறிவீரே.