பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


அசதி மிகுதி யாகையினால் யானே திரும்பிப் படுப்பதற்கு வசதி யில்லை அன்புடையீர் வந்தென் காலைப் பிடித்துடனே இறைவன் இல்லாத் திசைநோக்கி இழுத்துத் திருப்பி விடுவீர்என் குறையைப் பொறுப்பீர்?’ எனவேண்டிக் கொண்டார் குருதேவ் ஹாஜியிடம். கடவுள் எங்கும் இருப்பதனைக் கருதிப் பார்ந்த ஹாஜியும்தன் மடமை யுணர்ந்து பெரியவரை மன்னிப் புக்கேட் டகன்றாரே!