பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39 கோட்டை மதிலின் ஒரு புறத்தில் குண்டு பாய்ந்து தகர்த்ததனால் ஒட்டை யாகிப் போயிருந்த ஒருவழி யாகப் பலர்வந்தார். இருக்கும் வாசல் நான்கினிலே ஏதோ ஒன்றை உமர்கய்யாம் குறித்தி ருப்பார் அதனை இக் கொடியோன், பொய்யாய்ச் செய்துவிட்டான்?? சூேழ்ச்சி பெரிய சூழ்ச்சியிது . சொல்லில் வல்லான் தனைவிழ்த்தும் சூழ்ச்சி கொடிய சூழ்ச்சி யெனச் சொல்லி வீரர் வருந்தினரே. மடித்து வைத்த தாளெடுத்து மன்றம் அறியச் சுல்தானும் படித்தார், இரண்டு சொற்களையே படித்தார், முகங்கள் மலர்ந்ததடா! ஐந்தாம் வாசல்?’ என்பதுதான் அந்த இரண்டு சொற்களடா நொந்தான் அழுதான் கூத்தாடி நூறு தடவை அடிபணிந்தான். 'ஏழை பிழையைப் பொறுத்தருளி இரக்கங் காட்ட வேண்டுமையா மீளப் பேசேன் ஆணவமே மேன்மை மிக்கீர்’ என்றிரந்தான்.