இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
47
முத்திரை மோதிரம் தனைக்கழற்றி
முறுவலை முகத்தினில் கொண்டேற்றி
எத்தனை வேண்டுமோ அத்தனையும்
ஏற்றுநீ செல்:கென விடைகொடுத்தான்!
நன்றிகள் உரைத்தனன்; பொருளறைக்கு
நடந்தனன், விரைந்தனன்; அதிகாரி
தன்னிடம் மன்னவன் மோதிரத்தைத்
தந்தனன் கட்டளை தனைச்சொன்னான்.
கரும்பினும் இனியதாம் நெஞ்சுடையார்
கருணையின் வடிவமாய்த் தோன்றியவர் விரும்பிய பெற்றுநீ செல்லென்றே
விடைகொடுத் தார்பெரும் வள்ளலவர்!
ஐம்பதி னாயிரம் பொன்கொடுப்பாய்
அழகுற என்மகள் திருமணத்தை
எம்மவர் வியந்திட நடத்திடுவேன் -
எடுஎடு விரைவினில்?’ என்றுரைத்தான்.
எளியவன் இவன்மகள் திருமணத்திற்.
கித்தனை பெரும்பொருள் கொடுத்திடவோ?
துளியொரு பொருத்தமும் இல்லையிதில்
சூதிருந் தாஸ்து தெளிந்திடுவேன்.
இப்படி நினைத்தந்த அதிகாரி
இருஇரு சற்றென ஓடிவந்தான்
தப்பிருந் தாலெனை மன்னியுங்கள்;
தகுதிக்கு மீறிய பொருள்கேட்டான்.