பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49



பாவேந்தர் பாயிரம்

ஒருநாள் அருமைப் பாவேந்தர் உட்கார்ந் திருந்தார் வீட்டினிலே இருவர் வந்தே நுழைந்தார்கள் இருக்கை கொடுத்தே உபசரித்தார். ஒருவர் நண்பர் மிகப்பழக்கம் உடையார், வந்த மற்றொருவர் அருமை நண்பர்க் குறவினராம் அழகு மிக்க இளம்பிள்ளை. தமிழில் வல்ல பாவேந்தர் தேம்பி, யாரோ??? எனக்கேட்டார் 'அமிழ்தம் போன்ற பாட்டெழுதும் அருமைக் கவிஞர் இத்தம்பி, தங்களைப் போல் நன்றாகத் தம்பி பாட்டுக் கட்டிடுவான் இங்கோர் தொகுதி அச்சிட்டான் - இதுதான்?’ என்று கொடுத்திட்டார். 'இந்தப் பாட்டு நூலுக்கே ஏற்ற தாமோர் பாயிரமே தந்து வாழ்த்த வேண்டுமெனத் தாழ்ந்து கேட்டார் அந்நண்பர்.