பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


சீரில் லாத குறிகேட்டுச் சிறி னான்செங் குட்டுவனே யாரும் திடுக்கிட் டெழுமுன்னே அன்புத் தம்பி எழுந்துநின்றான். 'வயிற்றுப் பிழைப்பு நடத்திடவே வருவ துரைக்கும் தொழில்கொண்டீர் துயரப் படுத்திக் குடிகெடுக்கும் - தொழிலை இனிமேல் விட்டிடுவீர்! அண்ணன் இருக்கப் பேரரசை ஆள முயல்வோன் வீடணனாம் வண்ண முடியை மூத்தவர்க்கே வழங்கும் நாடு தமிழ்நாடாம்! நாட்டு வழக்கும் தெரியாமல் நாக ரிகமும் புரியாமல் கேட்டுக் குரிய மொழிசொன்னீர் கிழவர், அதனால் மன்னித்தேன் ஓடிப் போவீர்?? என்றுரைத்தான். உயிர் பிழைத்த தெனக்கருதிக் கேடு பரப்பும் தொழிலுடையான் கிழவன் அகன்றான் அவைவிட்டே. குறிசொன் னவர்பால் இளங்கோவே கோபம் கொள்ளல் சரியன்றே. அறிஞர் வியக்கச் சிலபோதில் அவ்வே பலித்தல் இயல்பாகும்??