இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60
மோசம் செய்தல் ஒரு குற்றம்-கொலை
முடித்தல் மற்றோர் பெருங் குற்றம்
நீசக் குயிலே இதற்கெல்லாம்-இன்று
நீதான் என்ன பதில் சொல்வாய்?
கானக் கோழி பேசியவுடன்-அந்தக் காட்டுப் பறவை அத்தனையும்
வானம் அதிர முழங்கினவாம்! -குயில் வாழக் கூடா தென்றனவாம்!
காட்டை விட்டு விரட்டிடுவீர்!-எதிர்
கண்ட இடத்தில் கொத்திடுவீர்!
வேட்டை யாடி ஒழித்திடுவீர்-சற்றும் வேண்டாம் ஒதுக்கித் தள்ளிடுவீர்!
வாயில் வந்த படியெல்லாம்-கத்தும்
வண்ணப் பறவைக் கூட்டத்தே
நேயக் குயிலும் பேசியதாம்-சற்று
நேரம் என் சொல் கேட்டிடுவீர்!
அமைதி கொண்டு கேட்டிடுவீர்-பேர்
அறிவு கொண்ட நெறித்தலைவீர்!
சுமத்திய குற்றம் அத்தனையும்-மறுத்துச் சொல்ல என்னால் ஆகவில்லை!
உண்மை மறுத்துப் பொய்யுரைக்க-என் உயிர்போம் எனினும் ஒப்பேன்நான்
கண்ணே அனைய குஞ்சுகளை-அடை காக்க நானும் விழைகின்றேன்.