இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
61
தாயாய் வாழ வேண்டுமென-நாளும் தவியாய்த் தவிக்கும் என்னுள்ளம்
நாயாய் அலைய வேண்டு மெனத்-தலையில்
நாதன் எழுதி வைத்துவிட்டான்!
கூடு கட்டும் அறிவெனக்கு-சற்றும்
கொடுக்க வில்லை நமைப்படைத்தோன் ஒடு கொண்ட ஒருமுட்டை-இட்ட
உடனே மற்றொன்றுருவாகும்! வயிற்றுள் இருக்கும் மறுமுட்டைவெளி
வருமுன் பொரியும் முதல்முட்டை உயிராய் வந்த குஞ்சுதனை-வளர்க்க ஒடித் தீனி சேர்த்திடுவேன்!
இரையைத் தேடி யலைவதனால்-அடை
இருந்து காக்கமுடியவில்லை
முறையாய்க் குஞ்சு பொரிந்திடவே-நான் முட்டை யிடுவேன் பிறர் கூட்டில்!
இறைவன் செய்த கொடுமையின்ால்-நான்
இனிய தாயாய் வாழவில்லை
குறைதான் எனதா? நமைப்படைத்த-அந்தக்
கொடிய இறைவன் எழுதியதா?
எண்ணிப் பார்த்தே தீர்ப்புரைப்பீர்!-நான்
என்றன் நிலையைச் சொல்லிவிட்டேன்
மண்ணில் உங்கள் தீர்ப்புதனை-நான் மதித்துப் போற்றி நடந்திடுவேன்!