பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


தாயாய் வாழ வேண்டுமென-நாளும் தவியாய்த் தவிக்கும் என்னுள்ளம் நாயாய் அலைய வேண்டு மெனத்-தலையில் நாதன் எழுதி வைத்துவிட்டான்! கூடு கட்டும் அறிவெனக்கு-சற்றும் கொடுக்க வில்லை நமைப்படைத்தோன் ஒடு கொண்ட ஒருமுட்டை-இட்ட உடனே மற்றொன்றுருவாகும்! வயிற்றுள் இருக்கும் மறுமுட்டைவெளி வருமுன் பொரியும் முதல்முட்டை உயிராய் வந்த குஞ்சுதனை-வளர்க்க ஒடித் தீனி சேர்த்திடுவேன்! இரையைத் தேடி யலைவதனால்-அடை இருந்து காக்கமுடியவில்லை முறையாய்க் குஞ்சு பொரிந்திடவே-நான் முட்டை யிடுவேன் பிறர் கூட்டில்! இறைவன் செய்த கொடுமையின்ால்-நான் இனிய தாயாய் வாழவில்லை குறைதான் எனதா? நமைப்படைத்த-அந்தக் கொடிய இறைவன் எழுதியதா? எண்ணிப் பார்த்தே தீர்ப்புரைப்பீர்!-நான் என்றன் நிலையைச் சொல்லிவிட்டேன் மண்ணில் உங்கள் தீர்ப்புதனை-நான் மதித்துப் போற்றி நடந்திடுவேன்!