இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6
பெரிய குருக்கள் அவர்சென்ற
பின்னர் கோயிற் பண்டாரம்
ஒருவர் அந்த வழிச் சென்றார்
உதவ வில்லை அவருந்தான்.
சமேரியாவாம் ஒரு நாட்டைச்
சார்ந்த மனிதன் ஒருவனிகன்
சுமைமிக் கதுவாம் கழுதையுடன்
தோன்றி னானவ் வழிதனிலே,
யூதர் குலமும் சமேரியரும்
ஒருவர்க் கொருவர் பெரும்பகையாம்!
ஆத லாலே எதிர்ப்பட்டால்
அவர்க்குள் சண்டை வந்திடுமாம்.
அந்த மனிதன் யூதனிடம்
அணுகிச் சென்றான்; புண்ணனைத்தும்
கந்தை எடுத்துத் துடைத்துவிட்டுக்
கட்டுப் போட்டு முடித்தனனே.
யூத னைத்தன் கழுதையிலே
உட்கார்ந் திருக்கச் செய்தருகில்
ஆதர வாகப் பிடித்துக்கொண்
டவனும் நடந்து சென்றனனே.
தூய ஏசு கதைசொன்னார்
சூழ்ந்த தொண்டர் தமைக்கேட்டார்;
"கோயிற் பணியா? பகைக்கிரங்கும்
குணமா? எதுமேல்? சொல்வீரே!"