பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. முருகுசுந்தரம்/101

வார். அவர் மனைவிக்கும் என் மனைவிக்கும் நெருங்கிய நட்பு. தங்கள் சுகதுக்கங்களை நீண்டநேரம் பரிமாறிக் கொள்வர். சில சமயங்களில் மனைவியை எங்கள் வீட் டில் விட்டுவிட்டு இரண்டொருநாள் வெளியூர் சென்று விட்டு மீண்டும் வந்து அழைத்துப் போவார்.

தஞ்சை, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய இடங் களில் நடைபெற்ற புலவர் குழுவில் நாங்கள் ஒன்றாகக் கூடியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நாகர்கோவில் புலவர் குழுவுக்குச் சென்றிருந்த போது என் மாணவன் நாஞ்சில் ஆரிது வீட்டில் தங்கியிருந்தோம். காலையில் கன்னியாகுமரி சென்று எழுகதிரின் அழகைக் கண்டு களித்துத் திரும்பினோம்.

நாங்கள் தனியாக இருக்கும்போது "நான் பாடும் பாட்டி லுள்ள குறை பற்றிச் சொல்லு பார்ப்போம். நீர் சொன் னால் சரியாக இருக்கும்' என்று கேட்பார்.

"நான் குறை சொல்லமாட்டேன்; குறையும் இல்லை’ என்று நான் சொல்லுவேன்.

"புதுவையிலே ஆட்சிக்குவரும் தலைவர்களெல்லாம் நீங் கள் திட்டினால் பொறுத்துக் கொள்கிறார்களே! ஏன்?" என்று நான் கேட்பேன்.

"எல்லாத் தலைவனும் 1932லிருந்தே எனக்குப் பழக் கம்’ என்று அவர் சொல்லுவார்.

நாங்கள் அரசியல் வாதிகளாயிருந்தால் அடிக்கடி சந் திக்கும் வாய்ப்புண்டு; நாங்கள் இலக்கிய வாதிகள். எப் போதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்போம். சந்திக்கும்போது ஒருவரையொருவர் கேலிசெய்து சிரித்துப்பேசி மகிழ்வது எங்கள் வாடிக்கை. நாங்கள் கூடியிருப்பதையும் பேசிமகிழ்வதையும் எல்லாரும் வியப் போடு பார்ப்பார்கள்.