பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில் கூவிக் கொண்டிருக்கும்

ஈரோடு காமராசர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை யாசிரியராகப் பணியாற்றும் முருகுசுந்தரம் தமிழ் இலக்கிய மேடைதொறும் தம் கவிதைகளை மெல்லிய பூங்காற்றம் வீச வைத்த புதுமைக்கவிஞர். பாவேந்தர் குயிலிலும் சுரதாவின் கவிதை இதழ் களிலும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட முருகு 'கடைதிறப்பு என்னும் தொகுதி மூலம் கவிதையின் நல்லழகை எவரும் எளிதில் வசப்படும் வகையில் அறிமுகப் படுத்தியவர். பனித்துளிகள்’-தமிழக அரசின் பரிசுபெற்ற இவரது மற்ருெரு தொகுதி. பாவேந்தரின் பரம்பரையைச் சேர்ந்த இவர் பாவேந்தரைக் கண்டும் கேட்டும் அறிந்த நிகழ்ச்சிகளைப் பாவேந்தர் நினைவுக ளாக்கியுள்ளார். ஒரு கவிஞன் இறந்து இருபத் தைந்து ஆண்டுகளுக்குள் அவனைப் பற்றிய வரலாறுகள் எல்லாம் எழுத்தில் வந்துவிட வேண்டும். ஏனென்றல் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் அக்கவிஞைேடு நெருங்கிப் பழகிய தலைமுறை மறைந்துவிடும். அதன் பிறகு எழுதப்படும் நூல்களுள் புனைந்துரை இடம் பெற்றுவிடும்’ என்று கருதி பாவேந்தரோடு பழகிய அன்பர்களிடமிருந்து திரட்டிய செய்திகளைக் குயில் கூவிக்கொண்டிருக்கும் என்னும் நூலாக்கியுள்ளார். இது பாவேந்தர் நினைவுகள் வரிசையில் வரும் மூன்றவது நூல்.

இது ஒர் அகரம் வெளியீடு