பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i> முருகுசுந்தரம் 113

தொட்டி, உண்பதோ கம்பஞ்சோறு, பேரெல்லாம் பொம்மன் திம்மன்’ என்ற தனிப்பாடல் வரிகளை எடுத்து வைத்துக்கொண்டு அதற்குச் சிலேடைப் பொருள்கூறித் திருக்குறள் முனிசாமி கலாட்டா செய்துகொண்டிருந் தாா.

ஒருநாள் காலை 7.30 மணியிருக்கும்; வெளியில் சென்று விட்டுப் பாவேந்தர் பிருந்தாவன் விடுதி அறைக்குத் திரும்பினார். வழக்கம்போல்அறைச் சிற்றாள் காஃபி கொண்டுவந்தான். காஃபி வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டார். ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக் கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். நானும் அமைதியாக இருந்தேன்.

சிந்தனையிலிருந்து விடுபட்டு சர்மா’ என்று கூப்பிட் டார். ஏன்?" என்றேன் நான்.

'தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.’’ என்ற பாட்டுக்கு ஒரு புத்துரை கூறப்போகிறேன். இரவு நேரத்தில் கணவன் மனைவியிடையே சண்டை. கண வன் முரடன். மனைவியை நன்றாக உதைத்துவிட்டான். சண்டைக்குப் பிறகும் அவன் மனைவியை விடவில்லை. அவளிடத்தில் இன்பம் துய்த்தான். இருவரும் களைப் போடு உறங்கிவிடுகின்றனர். மனைவி அதிகாலையில் கண்விழித்து எழுந்தாள். கணவனின் அடிகளைத் தொட்டு வணங்கினாள். ஏன்?' என்று கேட்டார்

பாவேந்தர். நான் விழித்தேன்.

“அடித்தாலும் உதைத்தாலும் இரவில் இவ்வளவு இன் பத்தை எவன் தருவான்?-என்று நினைத்தாள் அவள். கணவன்மீது அளவில்லாத அன்பு அவள் உள்ளத்தில் ஊற்றெடுத்தது. அவன் காலைத் தொழுதாள். இத்த கைய மனைவி கணவனுக்குப் பெய்யென்றவுடன் பெய் யும் மழை போலப் பயன்மிக்கவள்’’ என்று கூறினார்.