பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20:குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

ஒரு முறை பாவேந்தரும் நானும் சார்லிசாப்ளின் நடித்த திரைப்பட மொன்று பார்க்கச் சென்றோம். அது ஊமைப் படம்.

சார்லிசாப்ளின் சுவரில் ஆணி அடிப்பதுபோல் ஒருகாட்சி. அவர் மிகவும் குள்ளமாக இருந்ததால், அருகில் இருந்த தண்பர் எதையாவது போட்டு அடி' என்று கூறிவிட்டுப் போனார். (அதாவது எதையாவது உயரமாகப்போட்டு அதன்மேல் ஏறி நின்று அடி என்ற கருத்தில் அவர் சொன்னார்) சாப்ளின் அருகில் இருந்த செய்தி தாளைப் போட்டு அதன்மேல் ஏறி நின்று அடித்தார். இது வேடிக்கைதானே! எட்டாத காரணத்தால் அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அதன்மேல் ஏறிநின்று அடித்தார்.

சுவரில் ஆணி லேசில் இறங்கவில்லை. அதற்குள் சாப்ளி னுக்கு வேர்த்து விருவிருத்துப் போய்விட்டது. விரலெல் லாம் வியர்வையினால் நனைந்திருந்த காரணத்தால் ஆணியும் நனைந்திருந்தது அந்த ஆணி ஈரம்பட்டு வழுக்கியது. எனவே கழுத்தில்அணிந்திருந்த 'டை'யில் அதைத் துடைத்தார். துடைத்தவர் அந்த டையோடு சேர்த்து ஆணியை அடித்து விட்டார். ஆணியை அடித்து முடித்தவுடன் நாற்காலியிலிருந்து கீழே குதித்தார். டை ஆணியில் மாட்டிக் கொண்டிருந்த காரணத்தால் அவர் சுவரில் தொங்கினார். இந்தக் காட்சியைப் பார்த்த பாவேந்தர் சிரிப்பை அடக்க முடியாமல் துள்ளிக் குதித் தார். அவர் கையில் இருந்த சிகரெட்நெருப்பு அருகில் உட்கார்ந்தவரைச் சுட்டுவிட்டது.

அவர் கோபத்தோடு என்னய்யா இது? கண்ணுகிண்ணு இருக்கா? நெருப்பாலே சுடரியே?’ என்று கேட்டார். அதற்குப் பாவேந்தர் சிரித்துக்கொண்டே முண்டம்!

நெருப்புச் சுடறது உனக்கு இப்பத் தெரியுதா?” என்று கேட்டார். நகைச் சுவையை மெய்மறந்து எப்படிச்