D. முருகுசுந்தரம்/41
ராதே!’ என்று கூறியதை நான் அருகில் இருந்து கேட் டேன். இது போல் எத்தனையோ நாட்கள்! ரிக்ஷா வில் ஏறி நாள் முழுதும் சுற்றிவிட்டு, ரிக்ஷா இழுப்பவ னுக்குப் பத்தோ இருபதோ தாராளமாகக் கொடுப்பார்.
கவி காளமேகம் படப்பிடிப்பின் போது கையில் காசு தாராளமாக இருக்கும் நேரத்தில் எல்லாரையும் காரில் போட்டுக்கொண்டு எலியட் பீச்சுக்குப் போவார். கடற் கரையிலேயே விருந்துக்கு ஏற்பாடு செய்வார். காலி யான மதுப்புட்டியில் கார்க்கை அடைத்துக் கடலுக்குள்
வீசுவார். அலைமீது மிதக்கும் அப்புட்டியை நாங்கள் நீந்தி எடுத்துக்கொண்டு வரவேண்டும். பாவேந்த ரோடு பழகிய நாட்கள் நினைத்தாலே இனிக்கும் நாட்கள்.
கவி காளமேகத்தில் பாவேந்தர் எழுதிய சில திரைப் படப்பாடல்கள்:
[1]
வண்மை சேர்தமிழ் நாடெங்கள் நாடு வாழ்த்துவோம் அன்போடு
- (வண்மை) திண்மை யாகிய தோள்வீரர் திங்கள் முகங்கொள் பெண்கள் வாழும்நாடு
(வண்மை)
பூரிக்கும் தமிழ்க் கவிதை வாழ்வினுக் கதேஜீவன் பாருக்கே இன்பம் பாவிக்கும் பழநாடு வாழ்வின் பயன்சொன்ன நாடு.
சந்தனம் கமழ்பொதிகை சந்தப் பறவையின் கீதம் சிந்தையில் பொங்கும் ஆனந்தம் செந்நெல் வயல் சிறக்கின்ற நாடு.