பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> முருகுசுந்தரம்/51

வருக்குத்தான் இருந்தது. வேறு யாரும் அவரை நீ" என்று ஒருமையில் சொல்லி நான் கேட்டதில்லை.

டி.ஆர்.எஸ்ஸை சந்தித்த பிறகு பாவேந்தர் வெளியில் வந்தார். நானும் அவரும் மெதுவாக ஸ்டுடியோ வாயிலை நோக்கிப் பேசிக்கொண்டே நடந்தோம். டி.ஆர்.எஸ். தமிழை ஆங்கில பாணியில் பேசிப் பழக்கப் பட்டவர். அவர் பாவேந்தரின் சந்தத் தமிழைப் பேசி னால் எப்படியிருக்கும்?

பாவேந்தர் சொன்னார்:

'இந்திரஜித் மண்டோதரியின் வயிற்றிலிருந்து பிறந்து வெளியே வந்ததும் அழுதான். அவன் அழுத குரல் இடி இடிப்பது போல இருந்தது. அக்குரலைக் கேட்டுத் தேவர்களெல்லாம் அஞ்சி நடுங்கி ஓடி ஒளிந்தனர். அவ் வளவு Harshtone! இவ (டி.ஆர்.எஸ்) எப்படி என் வசனத்தைப் பேசித் தொலைக்கப் போறானோ?” என்று கூறி வருத்தப்பட்டார். அவர் எதிர்பார்த்தபடி தான் நடந்தது. இந்திரஜித் இராவணனிடம் பேசும் போது வெள்ளைக்காரப் பாணியில் தா... ந்தையே! என்று தான் திரைப்படத்தில் அழைத்தான். அப்படத்தில் தந்திரக் காட்சிகள் மிக அருமையாக எடுக்கப்பட்டிருந் தன, என்றாலும் படம் தோல்வியடைந்தது.

பாவேந்தர் மாடர்ன் தியேட்டர்ஸ்-க்குக் கடைசியாக எழுதியபடம் வளையாபதி. பாவேந்தரின் நீண்ட வசனங் களைக் கதாநாயகனாக நடித்த முத்துகிருஷ்ணனால் (பின்னர் வளையாபதி முத்துகிருஷ்ணன் என்று அழைக் கப்பட்டார்) பேச முடியவில்லை. அப்படத்தின் இயக்கு நரான ரகுநாத் அவ்வசனத்தைச் சில இடங்களில் இவ ரைக் கலக்காமலேவெட்டி (cut short) விட்டார். இச் செய்தி பாவேந்தர் காதுக்கு எட்டியதும் அளவு கடந்த கோபம் கொண்டார். ' 'என் வசனத்தை வெட்ட ணும்னா என் காண்ட்ராக்டையே கேன்சல் செய்யுங்க'