பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

னால் உடனே கோபப்படுவார்கள்: அக்குற்றத்தை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். பாவேந்தர் அதற்கு நேர் மாறானவர்.

மாடர்ன் தியேட்டர்ஸ் செட்டில் உட்கார்ந்திருக்கும் போது அவருடைய திரைக்கதை வசனத்தைப் பற்றி அவரையும் வைத்துக் கொண்டு நாங்கள் விமர்சனம் செய்வதுண்டு. பொதுவாகப் பாராட்டித்தான் பேசு வோம். இரண்டோர் இடங்களில் குறையேதுமிருந் தர்ல் அதையும் குறிப்பிடுவோம். சரி என்று பட்டால் உடனே அதைத்திருத்திக் கொள்வார்.

சுலாசனா படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.தேவேந் திரன், வாயு, வருணன் முதலிய தேவர்களையெல்லாம் இந்திரஜித் பிடித்து வந்து இலங்கையில் சிறை வைத் தான். பிரம்மதேவன் இலங்கை வந்து இராவணனை நோக்கி, இராவனேஸ்வரா! தோல்வி அடைந்தவரின் வாழ்வைக் குலைப்பது மேல்வலி படைத்த வீரர்க் கழ கல்லவே! அடைக்கலம் புகுந்தோரை ஆதரிப்பதல்லவா அரச தர்மம்? தேவேந்திரன் இல்லாவிட்டால் தேவ லோகமே அழிந்து விடும். என் பொருட்டாவது அம ரேசனை விடுவித்து அளகாபுரியை அழியாமல் காப் பாற்ற வேண்டும்! என்று கேட்டுக்கொண்டார். பிரம்மா வாக சேலம் தேவராஜநாயுடு என்பவர் நடித்துக் கொண் டிருந்தார்.அவர் இலக்கியங்களில் ஓரளவுஈடுபாடுகொண் டவர். தேவேந்திரன் தலைநகர் அமராபதி. குபேரன் தலைநகர் அளகாபுரி. இந்த வேறுபாட்டை அறிந்த அவர் அளகாபுரி என்று இருப்பது தவறு என்று செட் டில் கூறிக்கொண்டிருந்தார். சிறிய சலசலப்பு அங்கு ஏற்பட்டது.

"என்னய்யா அங்கே தகராறு?’ என்று டி.ஆர்.எஸ் கோபத்தோடு வந்தார். பிரம்மாவை அடிக்கக் கை யோங்கினார். அப்போது நாயுடு அவரைப் பார்த்து, "நான் நடிகனாயிருந்தால் படித்திருக்கக் கூடாதா? நான்