பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> முருகுசுந்தரம்/6!

தான் நேராகச் சிறையிலிருந்து வருவதாகச் சொன்ன தும் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. என்னைப்பற்றி எல்லாச் செய்திகளையும் பொறுமையாகக் கேட்டார். ஒரு வாரம் அவரோடு புதுச்சேரியிலேயே தங்கியிருந்தேன். இடை யிடையே சுத்தானந்த பாரதியார், பொதுவுடைமைக் கட்சிப் பிரமுகர் சுப்பையா ஆகியோரையும் பார்த்து விட்டு வருவேன். புதுவையிலிருந்து புறப்படும்போது பாவேந்தருக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் ஏற் பட்டிருந்தது.

அலிப்பூர் சிறையில் பொதுவுடைமை வாதிகளின் கூட்ட மொன்று இருந்தது. பாண்டி சுப்பையா, நாகப்பட்டினம் முருகேசன், கோவை ரமணி, கேரளா இம்பிச்சி பாபா ஆகியோர் அக்கூட்டத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் சிறைக்குள்ளேயே அரசியல் வகுப்புகள் நடத்துவது வழக்கம். நான் சிறைக்குள் இருக்கும் போதே அவர்களின் தொடர்பால் பொதுவுடைமைக் கட்சிஉறுப்பினன் ஆனேன்.அப்போது பொதுவுடைமைக் கட்சியும் சமதருமக் கட்சியும் காங்கிரசுக்குள்ளேயே அதன் அங்கங்களாக இயங்கிக்கொண்டிருந்தன.

நான் புதுவையிலிருந்து ராஜபாளையம் திரும்பினேன். ராஜபாளையத்தில் காங்கிரஸ் கூட்டம் நடந்தால், என் நண்பர் வசந்தன் நீங்களே சொல்லுங்கள் (சித்திரச் சோலைகளே என்று தொடங்கும் பாடல்) உலகப்பன் பாட்டு ஆகிய பாவேந்தர் பாடல்கள் இரண்டையும் முதலில் பாடுவார். அதன் பிறகு கூட்டம் துவங்கும்.

பாவேந்தர் ஒரு முறை செட்டிநாடு வந்தபோது கானாடுகாத்தான் வை. சு. சண்முகஞ் செட்டியார் வீட்டிற்கு வரும்படி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். வை, சு. சண்முகம் செட்டியார் கானாடு காத்தானின் குறிப்பிடத்தக்க பெருஞ் செல்வர்களில் ஒருவர். நான் அவர் வீட்டிற்குச் சென்று பாவேந்தரைப் பார்த்தேன். அதன்பிறகு பாவேந்தர் தெற்கு மாவட்டங்களுக்கு எப்