பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

யடிவாரத்துக்குச் சென்று கொண்டிருந்தது; பாவேந் தரும் உடன்வந்து கொண்டிருந்தார். அவர் ஏறிச்சென்ற காரின் குறுக்கே ஒரு வாத்துக் கூட்டம் சரேலென்று வந்தது. காரோட்டி எவ்வளவு முயன்றும் வண்டியை நிறுத்த முடியவில்லை. ஏழெட்டு வாத்துகள் வண்டியில் அடிபட்டு இறந்து விட்டன. உடனே பாவேந்தர் அங் கிருந்தவர்களிடம், "செத்துப்போன வாத்துக்கெல்லாம் சுந்தரத்தைப் பணம் கொடுக்கச் சொல்லு" என்று சொல்லிவிட்டு அவ்வாத்துக்களைச் சேலத்தில் அப்போது குடியிருந்த நகைச்சுவை நடிகை பி.எஸ். ஞானத்தின் வீட்டுக்கு அனுப்பிச் சமைக்கச் சொன்னார்; இரண்டு நாள் சுவைத்துச் சாப்பிட்டார்.

கோவையில் தமிழ்த் தேசியக்கட்சி மாநாடு நடைபெற் றது. அதில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாத னும், பாவேந்தரும், நானும் கலந்து கொண்டோம்.

நடுப்பகல் உணவு கோவை அறிஞர் ஜி.டி. நாயுடு இல் லத்தில் ஏற்படாகி இருந்தது. இலையில் உணவு பரி மாறப்பட்டது. ஜி. டி. நாயுடு சைவ உணவுக்காரர் ஆயிற்றே. இலையில் உப்பு, பருப்பு, சோறு, நெய்,

புடலங்காய் பரிமாறப்பட்டிருந்தன. அந்த சாப்பாட் டைப் பார்த்தவுடனே பாவேந்தருக்கு ஓர் அலெர்ஜி'.

ஜி. டி. நாயுடு அருகில் நின்று கொண்டிருந்தார்.

பாவேந்தர் அவரைக் கூப்பிட்டு, ஏப்பா நாயுடு! இதைச் சாப்பிட்டுத்தா உயிரோட இருக்கறயா?” என்று கேட்டார். நாயுடு சிரித்தார். பிறகு அருகில் உட்கார்ந் திருந்த என்னைப் பார்த்து “கண்ணதாசா! எந்திரி ! நமக்கு இதெல்லாம் ஒத்து வராது" என்று சொன்னார். நானும் பாவேந்தரும் பெங்களுர் பிரியாணி ஓட்டலுக் குச் சென்றோம்.

பாவேந்தர் மாரடைப்பால் தாக்கப்பட்டுச் சென்னை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்தி கிடைத்தது. சென்னை அரசாங்க மருத்துவ மனையில்