பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

எப்போதும் நின்று கொண்டிருக்கும். ஒரு காரை (Study Baker) பெரியாருக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார். இந்தி எதிர்ப்பின்போது அரசாங்கம் பெரியாரிடமிருந்து பறிமுதல் செய்த கார் அதுதான்.

நானும் இயக்கத்தோழர்களும் இன்பமாளிகையில் தங்கி யிருந்த போது வை. சு. சா. ஒரு வழக்கின் பொருட்டு மலேயா சென்றிருந்தார். வை. சு.ச.வின் துணைவியர் பார்வதி அம்மாள் அப்போது நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தார். அந்த அம்மையாரைக் கண் காணிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருந் தேன், நோயினால் வருந்திக் கொண்டிருந்த அம்மை யார் திடீரென்று ஒருநாள் உயிர்விட்டார். வை. சு. ச. விற்கு உடனே செய்தி அறிவிக்கப்பட்டது. ஆன்ால் அவர் கானாடு காத்தான் வந்து சேரப் பத்து நாள் ஆகி விட்டது. செட்டிநாடு முறைப்படி சமபந்தி விருந்து மிக வும் ஆர்ப்பாட்டமாகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது. பெரியார் விருந்துக்கு நேரில்வரவில்லை; கடிதம் மட்டும் எழுதியிருந்தார்.

வை.சு.ச. வந்த பிறகு அவருக்குத் துணையாக நானும் சில நண்பர்களும் கொஞ்ச நாட்கள் கானாடு காத்தா னில் தங்கியிருந்து ஆறுதல் கூறினோம். மனைவியை இழந்த நிலையில், குழந்தைகளோடு தனியாக இருந்த அவருக்கு ஒரு பெண்துணை தேவைப்பட்டது. கொள் கையால் ஒன்றுபட்டிருந்த நாங்கள் இருவரும் நீண்ட நேரம் நன்கு சிந்தித்து வாழ்க்கையிலும் ஒன்றுபடுவது என்று முடிவு செய்தோம். நீதிக்கட்சிப் பிரமுகர் திரு வாளர் செளந்திர பாண்டியன் முன்னிலையில் மதுரை யில் எங்களுக்குப் பதிவுத்திருமணம் நடைபெற்றது.

பாவேந்தர் பாடல்களில் எனக்கு இளமையிலிருந்தே ஈடு பாடு அதிகம். என்கணவர் ஏற்கனவே பாரதியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்; இலக்கியப்பற்று மிக்கவர். எனவே சுயமரியாதை இயக்கத்தின் இதயக்