பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82|குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

வதுபோல் எனக்கும் லைசென்ஸா கட்டப் போறாங்க?" என்று கேட்டாள். நான் வியப்பினால் விக்கித்துப் போனேன். தமிழ்நாட்டின் புரட்சிக் கவிஞனுக்கு ஏற்ற புரட்சிப் பெண்தான் இவள் என்று நான் மிக்க மகிழ்ச்சி யடைந்தேன். உடனே நாங்களே அதற்கு ஒரு முடிவு கண்டோம். தமிழரின் சின்னமான புலியில்கயல் பொறித்த பதக்கமொன்று தாலிக்குப் பதிலாகத் திரு மணத்தின் போது அணிவிக்கப்பட்டது. அவர்கள் குடும் பத்தில் எல்லாத் திருமணத்திலும் அப்பழக்கம் இன்றும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்தபிறகு மணமக்கள் இருவரும் கானாடு காத்தான் வந்து சிலநாட்கள் தங்கியிருந்து விட்டு மகிழ்ச்சியோடு திரும்பினர்.

சரசுவதியின் திருமணத்துக்குப் பிறகு ஒரிரு ஆண்டு களில் எங்கள் குடும்பத்தில் சில குழப்பங்கள் நிகழ்ந் தன. மலேயாவில் நடந்து கொண்டிருந்த எங்கள் வாணி பம் சீர்குலைந்தது. அங்கிருந்த சொத்துக்கள் சம்பந்த மான வழக்குகளில் வை. சு.ச. ஓயாமல் ஈடுபட்டிருந் தார். 10 லட்சம் ரூபாய் அளவுக்கு வரவேண்டிய செல் வம் வழக்கின் காரணமாகத் தடைப்பட்டுக் கிடந்தது. வை. சு.ச. அமைதியிழந்தார். அடிக்கடி சீற்றத்துக்கு ஆளானார். அவர் கடைப்பிடித்துவந்த சீர்திருத்தக் கருத்துக்களும் ஆட்டம் கண்டன. பகுத்தறிவு வாதிகள் தங்கியிருந்த இன்பநிலையம் சாமியார்களுக்கு இடம் கொடுத்தது. சாமியார்களுக்கு ஏற்பச் சமைக்கும்படி என்னை என் கணவர் வற்புறுத்தியதால் நான் அவர் பால் கருத்து வேறுபாடு கொண்டு புதுவைக்குச் சென் றேன். பாவேந்தர் அப்போது சென்னைக்குக் கதை யெழுதப் போயிருந்தார். என் கணவர் புதுவைக்குக் கடிதம் மேல்கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். குழந்தை களுக்கு அம்மை கண்டிருக்கிறது என்று அவரிடமிருந்து கடிதம் வந்ததும் நான் கானாடு காத்தான் திரும்பி விட் டேன்.