பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பாரதி விழா. பாவேந்தர் என் வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அவரையும் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த னர். அப்பள்ளி ஆசிரியர் வி. ஜி. சீனிவாசன் பாவேந் தரை அழைக்க வந்திருந்தார். அவர் பாரதி மீது அளவு கடந்த பற்றுக் கொண்டவர். பாவேந்தரைச் சுற்றி யிருந்த தி. க. நண்பர்கள் சேதுபதி உயர்நிலைப் பள்ளி யில் ஒரே பார்ப்பனக் கூட்டம். அங்கே போகாதீர்கள்’ என்று கூறிவிட்டனர். அவரும் மறுத்துவிட்டார். சீனிவாசன் என்னிடம் வந்தார். என்ன? சேதுபதி உயர்திலைப் பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டீர்களா? பாரதி பணிசெய்த இடமாயிற்றே!' என்று பாவேந்த்ரி டம் கேட்டேன்.

"நான் மறுப்புச் சொல்லலையே! அவ்வளவு தூரம்...... கூடப் பேசிக்கிட்டுப்போக ஆளில்லை. சரி வா!' என்று சொல்லிப் புறப்பட்டார். கூட்டத்திற்குப் பேராசிரியர் கள் ரா.பூரீ. தேசிகன், ரம்போலா மஸ்கரனேஸ் ஆகி யோர் வந்திருந்தனர். பாவேந்தர் உள்ளே நுழைந்த தும் ஒரே கரவொலி. மற்றவர்கள் பேச்சை நிறுத்தி விட்டனர். "நான் கண்ட பாரதி என்பது இவர் பேசிய தலைப்பு. பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது. பாரதியை நேரில் கொண்டுவந்து தம் பேச்சில் நிறுத்தி

6ሻ፣ ፫፻፺ ...

மதுரை வந்தால் சார்மேகக் கோனாரைப் பார்க்கப் போவார். அவர்மேல் இவருக்குப் பற்று அதிகம். கோனாரும் இவரைப் பார்க்க வருவார். கோனாரைப் பார்க்கப் போகும் போது பழம், மாலை சகிதமாகத்தான் போவார். மாலையைப் போட்டுவிட்டுக் கோனாரின் கையைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொள்வார்.

ஒருமுறை மதுரையில் இருந்து வெளியான தமிழ்நாடு நாளிதழின் சார்பாக மலர் ஒன்று வெளியிட்டனர். அதற்குக் கவிதையொன்று வேண்டுமென்று பத்திரிகை