பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

குருகுலப் போராட்டம்

பாரதியார் எந்த உணர்வோடு பாடினார். இந்த நாட்டில் விடுதலை எப்படி இருக்க வேண்டும்?

விடுதலையை யார் யார் பெற வேண்டும்?

என்றெல்லாம் தூய மனத்தோடு சிந்திக்கிறார் பாதியார்.

விடுதலைப் போராட்டத்தைத் தலைமை யேற்று நடத்தியவர்கள் இந்தத் தூய்மையான மனத்தோடு இருந்தார்களா?

மக்கள் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும் என்ற மனப்பான்மை அவர்களிடம் இருந்ததா?

அவர்கள் எந்த மனப்பான்மையில் இருந்தார்கள் என்பதை இந்தக் குருகுலப் போராட்ட நிகழ்ச்சி வெளிக்காட்டி விட்டது.

மேலாதிக்க எண்ணமுடையவர்களின் முகத் திரையைக் கிழித்த தலைவர்களிலே பெரியாரின் பங்கு பெரும் பங்காகும்.

பெரியார் மட்டும் உறுதி படைத்தவராக இல்லாமல் இருந்திருந்தால், நாம் - தமிழ் மக்கள் எந்த அளவுக்குப் பின்தங்கி யிருந்திருப்போம் என்று சொல்லவே முடியாது.

எச்சரிக்கையும் விழிப்புணர்வும் உள்ளவர்களாக தமிழ்மக்கள் வாழ்வதற்கு வழிகாட்டியாக இருந்த இந்த நிகழ்ச்சியை நாம் இப்போது விரிவாக ஆராய்ந்து பார்க்கலாம்.