பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போருக்குள் ஒரு போர்

13

விடுதலைப் போராட்டத்தில் தம் உயிரையும் துச்சமென மதித்து, எத்தகைய சித்திரவதையையும் பொறுத்துக் கொண்டு, அன்னிய ஆதிக்கத்தின் கோரப் பிடிக்கு ஆட்பட்டு உயிர் துறந்த வீரப் பெரு மக்களின் இலட்சியக் கனவுகள் எல்லாம் பாழ்பட்டுப் போகாமல் காப்பாற்றிய பெருமை பெரியாருக்குத் தான் உண்டு.

சூது சூழ்ச்சி வஞ்சகம் பொறாமை ஆகியவற்றை எதிர்த்துப் பெரியார் தொடங்கிய பெரும் போராட்டம் தான் இந்தக் குருகுலப் போராட்டம்.

இதைத் தொடக்கத்திலிருந்து - ஆதியோடந்தமாக - இப்போது நாம் பார்க்கலாம்: