பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாட்டுக் கல்வியின்
தேவை

இந்தியாவில் கல்வி நிலை எப்படி யிருந்த தென்று சிறிது நினைத்துப் பார்க்கலாம்.

குருகுலம் உருவான பின்னணி அப்போது தான் தெளிவாகத் தெரியும்.‌‌...

ஐம்பத்தாறு நாடுகள் இருந்த காலத்தில், சிற்றுார்களிலே சில திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. பெரும்பாலும் ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருக்கும். சில ஊர்களில் பள்ளிக்கூடங்களே இருக்காது.

இந்தப் பள்ளிக்கூடங்களில் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பார்கள். சில சிறிய நூல்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.

இலக்கியங்கள், பெரிய நூல்கள் கற்ப தென்றால் அதில் தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கற்க வேண்டும். ஆசிரியர்க்கு மாணவர்கள் அடிமைத் தொண்டு புரிந்துதான் இந்த உயர் கல்வியைப் பெற முடியும்.

தொழில் துறைகளிலும் அப்படித்தான்.