பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டுக் கல்வியின் தேவை

19

இந்தப் பொல்லாங்கை ஒழிக்க வல்ல திட்டங்களை வகுத்து உடனடியாகச் செயலாற்றவும் பின் வாங்கக் கூடாது.

ஆங்கிலம் படித்தவர்கள் மேலானவர்கள் என்ற எண்ணம் இன்னும் ஒழியவில்லை. ஆங்கில மொழியின் மீதுள்ள மோகம் இன்னும் தனியவில்லை. தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பயிற்சி மொழியில் தான் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய மக்களிடமிருந்து இன்னும் போகவில்லை.

ஆங்கிலம் போய் விட்டால் எல்லாம் முழுகிப் போய்விடும் என்ற தவறான எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருந்து இன்னும் போகவில்லை.

காமராசர், பெரியார் போன்ற ஒப்பற்ற தலைவர்கள், ஆங்கிலம் இல்லாமலே பெருஞ் சாதனைகளை நடத்திக் காட்ட முடியும் என்று மெய்ப்பித்துக் காட்டிய பிறகும், இந்த அதிகாரவர்க்கம் திருந்த வில்லை என்பது வேதனைக்குரியது.

இந்த அடிமை எண்ணம் மாறினால் தான் நாம் உண்மையான விடுதலையைக் காண முடியும்.

ஆங்கிலக் கல்வியால் இன்னொரு கேடு ஏற்பட் டது. அரசாங்கம் நடத்திய பள்ளிகள் சில வென்றால், பாதிரியார்கள் நடத்திய பள்ளிக்கூடங்கள் பத்து மடங்காய் இருந்தன.

இந்தப் பள்ளிகளில் படிக்கப் போனவர்கள், மதம் மாறினார்கள்; அல்லது மாற்றப்பட்டார்கள்.