24
குருகுலப் போராட்டம்
விளங்கியவர்கள் மூன்று மணிகள் - ஒப்பற்ற பொன் மணிகள்.
சேலம் வரதராசுலு நாயுடு.
திருவாரூர் கலியாண சுந்தர முதலியார்.
ஈரோட்டு இராமசாமி நாயக்கர்.
இந்த மூன்று பேருடைய அயராத உழைப்பால் தான் தமிழ் நாட்டில் நாட்டுணர்வு வளர்ந்தது. மக்களிடையே விடுதலை உணர்வு மலர்ந்தது.
அடிமைத்தனத்தை யொழிக்கவும், மக்களி டையே நிலவிய வேற்றுமை யுணர்வுகளைக் களையவும், தன்னலம் பாராது அயராது உழைத்து வந்தவர்கள் இந்த மூன்று தலைவர்கள்.
மூன்று பேரும் காந்திய வாதிகள். காந்தியடிகள் என்ன சொன்னாலும் உடனே செயல் வடிவில் நடத்திக், காட்டும் செயல் வீரர்களாக விளங்கினார்கள்.
நாயுடு, நாயக்கர், முதலியார் நமது தலைவர்கள் என்ற எண்ணம் நாட்டு மக்களிடையே விளங்கியது.
தன்னுடைய செயல் திட்டங்கள் ஒவ்வொன்றும், உடனுக்குடன் நிறைவேறுவது தமிழகத்தில் தான் என்ற எண்ணம் காந்தியடிகளுக்கு உள்ளத்தில் ஊறிவிட்டது.
அதனால், தமிழ் நாட்டின்பால் அவருக்குத் தனி மதிப்பு ஏற்பட்ட தென்றே சொல்ல வேண்டும்.