பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

குருகுலப் போராட்டம்

கேட்கக் கேட்க ரெட்டியாரின் உதடுகள் துடித்தன. கண்கள் சிவப்பேறின. நெஞ்சு குமுறியது. தான் ஏதோ பாவம் செய்துவிட்டது போன்ற உணர்வு அவரை வாட்டியது. காந்தியடிகளின் அஹிம்சை இயக்கத்திலே பெற்ற பயிற்சியைக் கொண்டு அவர் தம் மனத்தை அடக்கிக் கொண்டார்.

இரவு முழுவதும் தூக்கமில்லை.

மறுநாள் காலையில் மகனை அழைத்தார்.

“நீ ஈரோட்டுக்குப் போ. பள்ளிக்கூடத்தில் நடந்த அட்டுழியங்களை ராமசாமி நாயக்கர் நயினாவிடம் செப்பு” என்று அனுப்பி வைத்தார்.

புதிதாக ஒரு சிறுவன் தன்னைப் பார்க்க வந்திருப்பதைக் கண்டு, பெரியார், அவனை “நீ யார்? என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

“நான் ஒமாந்துர் ரெட்டியாரின் கொடுக்கு” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் பையன்.

“என்ன செய்தி?” என்று கேட்டார் பெரியார்.

முதல்நாள் தன் தந்தையாரிடம் சொன்ன செய்திகளை யெல்லாம் பையன் ஆதியோடந்தமாக மிகத் தெளிவாக விளக்கிச் சொன்னான்.