54
குருகுலப் போராட்டம்
செயற்குழு உறுப்பினர் ஒருவர் இதற்கு ஒரு திருத்தம் கொண்டு வந்தார்.
“குருகுலத்தின் நடைமுறை சரியில்லாததால் கொடுத்த தொகையைத் திரும்ப வசூலிக்கத் தீர்மானிக்கிறது” என்று அவர் திருத்தம் கூறினார்.
இன்னொருவர் செயற்குழுவையே குறை கூறி ஒரு திருத்தம் கொண்டு வந்தார். ‘குருகுல நிர்வாகிகளிடம் தெளிவான வாக்குறுதி பெறாமல் நிதி கொடுக்கத் தீர்மானித்ததற்காக இக் கூட்டம் வருந்துகிறது’ என்பது அந்தத் தீர்மானம்.
மூன்றாவதாகச் சேலம் சி. இராசகோபாலாச் சாரியார் (இராசாசி) ஒரு திருத்தம் கொண்டு வந்தார்.
‘சேரமாதேவி குருகுலம் போன்ற நிறுவனங்களின் நடைமுறையில் பொது மக்கள் தலையிடுவதை தமிழ்நாடு காங்கிரஸ் கண்டிக்கிறது. வேறுபாடு காட்டாமல் உணவு பரிமாற நடவடிக்கை எடுக்குமாறு குருகுல நிர்வாகிகளுக்கு இச் செயற்குழு ஆலோசனை கூறுகிறது.’
தவறு நடந்ததைக் கண்டிக்க முற்பட்ட செயற் குழுவையே கண்டிப்பதாகக் கூறும் இந்தத் திருத்தத்தை இராசாசி போன்ற ஒரு மூத்த தலைவர் கொண்டு வந்தது குறித்து செயற்குழுவின் பெரும்பாலோர் மறுத்தும், வருத்தம் தெரிவித்தும் பேசினார்கள்.