பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீட்டுண்ணா என்ன நயினா

59

இந்த சமபந்தி பிரச்சினை புயலாக எழுந்த பிறகு நான் சேரமாதேவிக்குச் சென்றேன். நட்புரி மையோடு ஐயரிடம் பேசினேன். சமரசமாகப் போக வேண்டும் என்று எடுத்துச் சொன்னேன்.

ஆனால் ஐயர் பிடித்த பிடியை விடவில்லை. குருகுலத்தின் எதிர்காலத்தை அவர் நினைத்துப் பார்க்கவில்லை. இந்த நாட்டு மக்களின் தேசிய உணர்வை அவர் மதிக்கவில்லை. எதற்கும் ஒத்து வரவில்லை.

இந்த நிலையில் நாம் தீர்மானத்தை நிறைவேற்றி அவரைக் கண்டிப்பதைவிட வேறு வழியில்லை என்று மிக வருத்தத்துடன் பேசினார்.

ஈரோட்டு இராமசாமிப் பெரியார் பேசும்போது,

இது வெறும் சமபந்தி பற்றியது மட்டுமல்ல. ஒரு ஜாதிக்காரர்கள் இன்னொரு ஜாதியைக் கேவலப் படுத்துகின்ற செயல்.

இது பிராமணர்களும் மற்ற ஜாதிக்காரர்களும் பொருத்த விஷயம் மட்டுமல்ல. பஞ்சமர்களும் நமக்குச் சமமானவர்கள் என்று ஏற்க வேண்டிய காலம் வந்து விட்டது.

இன்று நாட்டில் அப்படியிருக்கிறது; இப்படி யிருக்கிறது அதன்படி நாமும் இருந்து விடலாம் என்பதல்ல; நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம்.