பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

குருகுலப் போராட்டம்

இப்படிப்பட்ட பெருஞ் சிறப்புக்களை யுடையவர் சாதிப்பாகுபாடுகளை நிலை நாட்டும் செயலைச் செய்தார் என்றால் அதன் பொருள் என்ன?

கற்றும் அறிந்தும் பிறர்க்குரைத்தும்
தான் அடங்காப்
பேதையிற்
பேதையார் இல்

என்ற பொன்மொழிக்கிணங்க அவர் எந்த நிலையிலும் யார் பேச்சும் கேட்காமல் செயல்பட்டார். இது ஒரு பேதைமை என்று நாம் அலட்சியமாக எண்ணிவிடுவதற்கில்லை.

இவரைச் சார்ந்தவர்கள்; இவர் போக்கை ஆதரித்தவர்கள்; அதற்காக வாதாடியவர்கள் யார் யார் என்று பார்த்தால் அவர்களும் மிகப் பெரிய மேதைகளே! பேதைகள் அல்லர்!

மூதறிஞர் ராஜாஜி அவர்களுடைய மேதையை அளவிட்டுச் சொல்வதற்கில்லை.

கே. சந்தானம், மிகப் பெரிய அரசியல் தத்துவ வல்லுநர்.

டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன் மூதறிஞர் ராஜாஜியின் நிழல் போன்றவர் டாக்டர் சுவாமிநாதன் பெரிய இலக்கிய மேதை!

இவர்களெல்லாம் வ.வே.சு ஐயர் செய்த ஒரு மோசமான செயலை ஆதரிக்கிறார்கள் என்றால்