பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காந்தியடிகள்
தடம்புரண்டார்

காந்தியடிகள் உலகம் போற்றும் உத்தமர். தம் வாழ்க்கையையே சத்திய சோதனையாக நடத்தியவர்.

உண்மைக்கு ஓர் இலக்கணமாக இருப்பவர். இந்திய நாட்டின் தந்தை என்று எல்லோராலும் போற்றப்படுபவர்.

சில நேரங்களில் தாம் சரியென்று நினைத்த ஒரு செயலை விடாப்பிடியாக நிறைவேற்றிக் காட்டுப வர்.

இப்படிப்பட்ட பெருஞ் சிறப்புக்களை யெல்லாம் உடைய காந்தியடிகள் ஒரு சில நேரங்களில் சபல மனம் உடையவராக மாறிவிடுவார்.

இவருடைய சபலங்களுக்கெல்லாம் காரணம் இவருடன் மிக நெருங்கிப் பழகிய பார்ப்பனர்கள் தான்!

தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற நல்ணெத்தில் காந்தியடிகள் அரிசன இயக்கத்-