பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தியடிகள் தடம்புரண்டார்

67

மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு போராட்டங்களைத் தொடங்குவார். போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று அதை நிறுத்திவிட்டதாக அறிக்கை விடுவார். தொண்டர்களுக்கு மனம் கசந்து போகும்.

காரணம் கேட்டால் எங்கோ ஒரு சிலர் வன்முறையில் ஈடுபட்டார்கள். அதனால் போராட்டத்தை நிறுத்துகிறேன் என்பார்.

போராட்டம் என்றால் இலட்சக் கணக்கானவர்கள் ஈடுபடும் செயல். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தவறுகள் ஏற்படுவது இயல்பு. அதை அவர் சிந்தித்துப் பார்க்க மாட்டார். மேலும் சில சமயம் அரசியல் எதிரிகளே களத்தில் புகுந்து கலகம் விளைவிப்பார்கள். இதெல்லாம் தவிர்க்க முடியாது என்று எண்ணிப் பார்க்கமாட்டார்.

நாம் இன்னும் போராட்டத்திற்குத் தகுதி பெற வில்லை என்று கூறி நிறுத்தி விடுவார். உண்மையான தொண்டர்களின் உற்சாகம் களைத்துப் போகும்.

இதெல்லாம்கூட ஒருவகையில் நியாயந்தான் என்று ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளலாம். சில சமயம் அநியாயங்களுக்கே துணைபோவார்.

குருகுலப் போராட்டத்தில் அவர் தடம் புரண்டது இந்த வகையைச் சேர்ந்ததுதான்.