பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v



இசை மேதைகளாகவும் விளையாட்டு வீரர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், பேரறிஞர்களாக வும், உலகப் புகழ் பெற்றவர்கள் இன்று கருப்பு இனத்தவர்களாக இருப்பதைக் காண்கிறோம்.

பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட ஆப்பிரிக்காக் கண்டத்து செனகால் நாட்டுத் தலைவர் செங்கோர், உலகத்தின் தலைசிறந்த கவிஞராகத் திகழ்கிறார்.

அடக்கி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் வாய்ப்பும் வசதியும் கிடைத்துவிட்டால், அறிஞர்களாகவும் திறமையாளர்களாகவும் மிளிர முடியும் என்பதற்கு இவை நல்ல எடுத்துக் காட்டுகள்.

எத்தனையோ தடைகளையும், துன்பங்களையும் கடந்து வாழ்க்கையில் முன்னேறி, இந்தியாவில் ஈடு இணையற்ற சட்ட மேதையாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கார் போன்ற தலைவர்கள் நமக்கு நல்ல எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்கள்.

தகுதியும் திறமையும் அடைய வாய்ப்பும் வசதியும் எல்லாருக்குமே கிடைக்க வேண்டும் என்பதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற சமூகநீதிக் கோரிக்கையின் அடிப்படையாகும்.

சமூகநீதிக் கோரிக்கையின் தொடக்ககால நிலையை விளக்குவதே - இந்தக் ‘குருகுலப் போராட்டம்’