பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

குருகுலப் போராட்டம்


அரிஜனங்கள் சீர்பெற வேண்டும் என்று கூறுவார்; ஆனால். அவர்களுக்குத் தனித் தொகுதி கூடாதென்பார்.

எல்லோரும் சரிநிகர் சமானமாக வாழவேண்டும் என்பார்; பொது உடைமைத் தத்துவம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல என்பார்.

சாந்தமான அஹிம்சை வழியே சாதனைக்கு உகந்த வழி என்பார்; போர்வெறியூட்டும் கீதையை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்பார்.

சாதி வெறி கூடாதென்பார்; வருணாசிரம தருமத்தை மீறக்கூடா தென்றும் சொல்வார்.

இப்படி ஏறுக்கு மாறான கருத்துக்கள் பலவற்றைப் போட்டுக் குழப்பிக் கொண்டு எந்த வழி ஏற்ற வழி என்று தெரியாமல் திண்டாடும்படி வழிநடத்துவார்.

காந்தியடிகள் மிகச் சாதாரணமான ஒரு சராசரி மனிதனின் இயல்பையே பெற்றிருந்தார் என்பதற்கு இவை யெல்லாம் எடுத்துக்காட்டுகள்.

பொதுவாக இளமைப் பருவத்தில் தான் இலட்சியவாதிகள் உருவாகிறார்கள். முதுமையிலும் அதைக் கட்டிக் காப்பவர்கள் கால காலத்துக்கும் உலகுக்கு நல்ல வழிகாட்டிகளாக அமைந்து விடுகிறார்கள்.