சமூக நீதியே சமநீதி
83
இவற்றை யெல்லாம் பெரியார் நன்றாக உணர்ந்து கொண்டார்.
சாதிவேறுபாடின்மை - திறமை என்ற சங்கிலியை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் மட்டுமே மேலிடத்தில் ஏறியமர்ந்து கொள்ளும் வித்தையை அறிந்து கொண்ட பெரியார்,
சாதிப் பெயரை வைத்துக் கொண்டே ஒவ்வொரு சாதியும் முன்னேறக்கூடிய ஒரு வழியைக் கண்டு பிடித்தார்.
ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும்; அதற்கு அரசு வேலை வாய்ப்புக்களில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்துக் காங்கிரசில் இருந்து கொண்டே போராடத் தொடங்கினார்.
இதுவே இன்று சமூகநீதி என்று எல்லா மக்களாலும் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு சாதிக்காரனும் தன் சாதி விகிதாசாரப்படி முன்னுக்கு வந்து விட்டால், எல்லாருக்கும் எல்லா நிலையிலும் உயர்வு கிடைக்க வழியேற்படும்.
வேத சாஸ்திரங்களின் குரல்வளையை முறிக்க அவை வளர்த்த சாதிகளின் பெயராலேயே ஒரு வழியைக் கண்டு பிடித்தார் பெரியார்.