பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூக நீதியே சமநீதி

87

இருப்பதால், நம் முயற்சிகளை எல்லாம் எளிதில் தட்டிவிட முடிகிறது. இதற்கு முத்தாய்ப்பு வைக்க நாம் சோர்வடையாது உழைக்க வேண்டும். ஒவ்வொரு தமிழ் மகனும் இதில் விழிப்பாக இருக்க வேண்டும்.

முன்னுக்கு வந்த ஒவ்வொரு தமிழ் மகனும் தன்னலமற்றவனாகத் தன் இனத்தாருக்கு உதவுபவனாக இருக்க வேண்டும். எந் நிலையிலும், தாழ்த்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டு இருக்கும் இனத்தவருக்கு, எந்தத் தமிழ்ச சாதியானும் இடையூறு செய்பவனாக இருக்கக் கூடாது.

தமிழ் மக்களுக்குள்ளே பேதங்கள் ஏற்றத் தாழ்வுகள் ஒழிவதற்காக வகுக்கப்பட்ட முறை தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் - சமூகநீதி என்பதை மறக்காமல் ஒவ்வொரு இனத்தாரும் முன்னேறுவோம்!

ஒவ்வொரு வகுப்பும் முன்னேறிவிட்ட நிலையில் தான்,

நாம் எல்லோரும்
சமம் என்பது
உறுதி யாகும்.