இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கோடானு கோடி
இந்தியரின் வெற்றி முழக்கம்
இந்தியரின் வெற்றி முழக்கம்
குருகுலப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னாலேயே பெரியார் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவம் என்ற சமூகநீதி வேண்டும் என்று போராடி வந்தார்.
குருகுலப் போராட்டம் அவருடைய போராட்டத்தைத் தீவிரமாக்க உதவியது என்றுதான் கூற வேண்டும்.
வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்ற கொள்கை பார்ப்பனரல்லாதாருக்காகப் பாடுபட்டு வந்த நீதிக் கட்சியினரால்தான் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது.
நீதிக் கட்சியின் முக்கிய கொள்கையாகவே இது அமைந்திருக்கிறது.
காங்கிரசில் இருந்த பெரியார் இந்தக் கொள்கையின் நியாயத்தை அப்போதே உணர்ந்திருந்தார்.
ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும் என்ற இந்தக் கொள்கையை காங்கிரசும் ஏற்றுக் கொள்ள-