பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோடனுகோடி இந்தியரின் வெற்றி முழக்கம்

91


தோற்றபோதெல்லாம் துவளாமல் அடுத்தடுத்து அவர் இடைவிடாது முயன்று வந்த காரணத்தால், இன்று நாம் வெற்றிப் பாதையில் நடைபோடத் தொடங்கி யிருக்கிறோம்.

பெரியாருடைய இடைவிடாத முயற்சியால் இன்று நாம் - தமிழ் மக்கள் உயர்ந்து வருகின்றோம்.

இந்த வெற்றி நடை. நம்மை முழு வெற்றி யிருக்கும் திசை நோக்கிச் செல்லப் பயன்படுகிறது.

சமூகநீதிக் குரல் இந்தியாவெங்கிலும் ஒலிக்கின்றது.

பெரியார் எழுப்பிய அந்தக் குரல் இன்று வெற்றிக் குரலாய் எங்கும் மக்கள் வாழ்வில் சமத்துவம் மலர வழிவகுக்கும் விடுதலை முழக்கமாய் ஒலிக் கின்றது.

கோடானு கோடி இந்திய மக்களின் எழுச்சிக் குரலாய் இன்று ஒலிக்கும் இந்த முழக்கம் அன்று பெரியார் எழுப்பிய முழக்கம்.

எனவே இந்திய மக்களாகிய நாம் பெரியாரை என்றும் நன்றியுடன் நினைப்போம்!

அவருடைய தன்மானக் கொள்கை - பகுத்தறிவுக் கொள்கை - நாடெங்கும் பரவ உழைப்பதாக உறுதி எடுத்துக் கொள்வோம்.