பக்கம்:குறட்செல்வம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸153

கொள்ளப் பெற்ற ஒழுக்கம். இதை நாம் அநாகரிகம் என்று கூறுவதற்கில்லை. இதற்கு அடிப்படை அந்தக் கால சமுதாயத்தில் உள்ள ஆண் பெண்களின் விகிதாசார எண்ணிக்கையே ஆகும்.

ஆனால் தமிழகத்தின் சூழ்நிலை வேறு. ஆதலால் பிறருடைய கருத்தைக் கேட்டு, சிந்தித்து, அக்கருத்து தன்னுடைய தனித் தன்மைக்கு இடையூறு செய்யாமல்தன்னுடைய நாகரிகத்தை வளர்த்துச் செழுமைப்படுத்த உதவுமானால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடாது என்பதே வள்ளுவப் பெருந்தகையின் கருத்து.

திருவள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் சமய சமுதாயக் கருத்துக்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து மோதின.

புத்தரின் கருத்துகள் பரவின. மகாவீரர் கருத்துக்கள் பரவின. ஆரிய மதக் கருத்துகளும் பரவின. இக்கருத்து களைச் சார்ந்தோர் அனைவரும் தங்களை பல்லாற்றானும் உயர்த்திக் கொண்டு கூறினர்.

அந்தச் சூழலில்தான்் திருவள்ளுவர், யார் சொல்லு கிறார் என்பது பற்றிக் கவலைப்படாதே! என்ன சொல்லு, கிறார்கள் என்பதைத் தெரிந்து - தெளிந்து - அது உண்மையானதாக -வாழ்க்கைக்கு இயைபுடையதாக இருக்குமானால் ஏற்றுக்கொள் என்று கூறினார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

發 Sደ Joo. 웃 7富 fr

கு-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/155&oldid=1276488" இலிருந்து மீள்விக்கப்பட்டது