பக்கம்:குறட்செல்வம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸155

ஒழுக்கமா வளரும்? நரகத்தைத்தான்் காட்டுங்களேன்?. ....... ஒருக்காலும் முடியாது.

குற்றம் இருக்கிற இடம் மட்டுமே நமக்குத் தெரி கிறது. ஆனால் அந்தக் குற்றத்தின், பிறப்பிடம் நமக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மறுக்கிறோம். காரணம் நாமேகூட அந்தக் குற்றங்கள் தோன்றக் காரணமாக இருப்பதனால்தான்்.

பொய் சொல்லுவது குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றமுடையது பொய் சொல்ல உருவாக்கிய சமுதாயமேயாம். திருடுவது பெரிய குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் திருடக்கூடிய சூழலில் சமுதாயத்தை அமைத்திருக்கிறோம்.

அழுக்காறு கொள்வது குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் அழுக்காறு தோன்றுமளவுக்கு ஏகபோக மாக வாழ்வதை அனுமதிப்பது. மேற்கண்ட குற்றங் களின்றி சமுதாயத்தின் நடைமுறையை ஒழுங்கு படுத்தி எல்லோரும் எல்லாவற்றையும் பெற்று வாழும் இயல் புடைய சமுதாயமாக அமைப்பது அரசின் பொறுப்பு.

ஆனால் இன்றோ அரசுகள் இந்தப் பொறுப்பினையா மேற்கொண்டு செய்கின்றன? இன்றோ அரசு:வல்லாளர் கள் கையிலேயே சிக்கி அவர்கள் கைப்பொம்மையாக இருக்கிறது. -

அரசு நாட்டு மக்களிடையே குற்றத்தைப் பார்க்கு மானால், அந்தக் குற்றம் மக்களிடையே தோன்றி வளர் வதற்கு அரசின் ஆட்சிமுறையின் குறைபாடே காரணம் என்பதை அறியவேண்டும். இது முற்போக்கான அரசாங் கத்தின் சிறந்த கருத்தும் அமைப்புமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/157&oldid=1276489" இலிருந்து மீள்விக்கப்பட்டது