பக்கம்:குறட்செல்வம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

உடனே விரைந்து உதவி செய்யும் பெண்ணே உயரிய வாழ்க்கைத் துணைவியாவாள்.

சிறு தெய்வங்களைத் தொழாது கணவனுடன் ஒன்றிய உணர்வால் ஒன்றித்து வாழ்தலின் காரணமாக உண்ர்வு நிறைந்த உறக்கத்தினின்று கண் துயில் நீங்கியவுடனேயே கணவனை உள்ளத்தால் நினைந்து, உணர்வால் தொழுது எழுகின்ற பெண், வேளாண்மை செய்தவன் வேண்டிய வாறு பெய்யும் மழை வேளாளனுக்குப் பயன்படுவதைப் போல இந்தப் பெண், தன்னைக்கொண்ட கணவனுக்கு ஒப்பற்ற வாழ்க்கைத் துணைவியாக விளங்குவாள். -

தெய்வம் தொழாஅள் கொழுகன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழ்ை.

瀏 應惑 鹦鲷

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/30&oldid=1276241" இலிருந்து மீள்விக்கப்பட்டது