பக்கம்:குறட்செல்வம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



9. அறிவறிந்த மக்கட்பேறு


விடும் நாடும் சிறப்பது நன்மக்களாலேயேயாம்: தன் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களன் மனைவதற வாழ்க்கை. வாழ்க்கைத் துணை நலத்தைத் தொடர்ந்து திருவள்ளுவர் மக்கட் பேறு பேசுகின்றார். ஒன்றிற் கொன்று தொடர்பிருக்கிறது.

ந்ன்மக்கட்பேறு வேண்டுமானால், தலைவனும் தலைவியும் நல்லவர்களாக இருத்தல் வேண்டும். ஒழுக்கம், பண்பு போன்றவை வழி வழி வளரக்கூடியன. அதனாலன்றோ கம்பன் குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட் கெல்லாம்’ என்று பேசுகின்றான். திருவள்ளுவரும் ‘குலமுடையான் கண்ணே யுள' என்கிறார்.

பொதுவாக பால்வேறுபட்ட ஒருவர்-ஒருவன் ஒருத்தி கூடி வாழ்ந்தாலே குழந்தை பிறக்கும்-மக்கட்பேறு கிடைக்கும். அஃது இயற்கை. ஆனால், திருவள்ளுவர் இத்தகு இயற்கையான மக்கட் பேற்றினைப் பாராட்டிப் பேசவில்லை. அவர் விரும்புவதெல்லாம் அறிவறிந்த மக்கட்பேறு." * r ,

இந்த அறிவறிந்த மக்கட் பேற்றினைப் பெற விரும்பும் தலைவனும், தலைவியும் தங்களை, முதலில் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் சீலத் தால் சிறந்த வாழ்வு நடத்துதல் வேண்டும். வித்தின் இயல்பு - நிலத்தின் இயல்பு ஆகியவற்றைச் சார்ந்ததே பயிரின் இயல்பு பயிரின் - நலம். 3. * : ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/31&oldid=1276335" இலிருந்து மீள்விக்கப்பட்டது