பக்கம்:குறட்செல்வம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



10. வெய்யிலும் அறமும்


காய்கதிர்ச் செல்கன் ஆக்கத்தின் சின்னம். இருள் நீக்கி ஒளிதருவது கதிரொளி; மடிநீக்கி ஏற்றத்திற்குரிய எழுச்சியை ஈவது ஞாயிறு. செந்நெல்லும் செங்கதிரும் பயனுறச் செய்வதும் செங்கதிரோன் ஒளியே யாம்! எழுகின்ற ஞாயிற்றின் ஒளி இருள்நீக்கும்-ஒளி பெருக்கும் -உறுதி பயக்கும்-வாழ்வளிக்கும்! -

எனினும், எலும்பில்லாத புழுக்களை அது தாக்கி வருத்தும் வெயிலின் கொடுமையினின்றும், தற்காத்துக் கொள்ள எலும்பு தேவை. எலும்பிருந்தால் தற்காத்துக் கொள்வது மட்டுமின்றிக் கதிரவனின் ஒளி கொண்டு வாழவும் முடியும். .

அநீதியை நீக்கி நீதியை நிலை நிறுத்துவது அறம். துன்பத்தை நீக்கி இன்பத்தை நிலைபெறச் செய்வது அறம். அறத்திற்கு விலை அன்பேயாகும். அன்புடை யோருக்கு அறம் தென்றல்! அன்பில்லாதவர்களுக்கு அது வருத்தும் வாடைக் காற்று-துன்பப் புயல்! ஏன்? அன்பின் விளைவு அறம், அன்பின் பயன் அறம். அன்பு பண்பு, அறம் பயன்! இன்பத்தின் தாய் அன்பு. . . .

அன்பில்லாமல் மனித குலத்திற்குத் தீமை செய்து வாழ்பவனை அறக் கடவுள் வருத்தும். இதிகாச உலகில் இராவணனும், பெளர்ானிய உலகில் பத்மாசுர்னும், அரசியல் உலகில் ஜார் மன்னனும் இதற்கு எடுத்துக் காட்டாவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/34&oldid=1276336" இலிருந்து மீள்விக்கப்பட்டது