பக்கம்:குறட்செல்வம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அணர வேண்டும். பாரததாட்டில் நாட்டு ஒழுக்கமாகச் கிகவற்றை நாம் திபதி செய்துகொண்டு அந்நெறியில் ஒழுக வேண்டும்.

பாரத நாடு மிகப் பெரிய நாடு. பல்வேறு மக்கள் வாழும் பெரிய நாடு. பல்வேறு சமய நெறிகளைக்கொண்டு ஒழுகுகிற நாடு. எனினும் மொழி, சமய வேற்றுமைகளைக் கடந்த ஓர் உணர்ச்சி பூர்வமான ஒருமைப்பாட்டைக் கொள்வது, நமது நாட்டொழுக்கங்களில் ஒன்று.

இரண்டாவதாக நாம் அனைவரும் விரும்பி, ஒரு பரிபூரண மக்கனாட்சி முறையை ஏற்றுக் கொண்டிருக் இன்றோம். மக்களாட்சி முறைப்படி ஒவ்வொரு மனித ணுக்கும் சிந்திக்கவும், கருதவும் உரிமை உண்டு. அவ்வழி அஃதான்து, கருத்து வேறுபாடுகளின் காரணமாகக் காழ்ப்பும், பகையும் காட்டுதல் கூடாது. அவ்வழி, கலகங் கரும் தோன்றக் கூடாது.

மக்களாட்சி முறை நிலவும் நாட்டில் நல்ல கருத்து மாற்றம், மனமாற்ற முயற்சிகள் நடைபெற வேண்டுமே ஒழிய, பகைவழி முயற்சிகள் கூடாது.

மூன்றாவதாக, இந் நாடு கூட்டுக் குடும்ப அமைப் புடையது. இந்நாட்டின் உடைமைகள் அனைவர்க்கும் பொதுவுடைமை. இந் நாட்டின் செல்வ வாழ்வு சமநிலை உடையதாக இருக்க வேண்டும். எல்லாரும் எல்லா நலன் களும் பெற்று வாழும் சமநிலைச் சமுதாய அமைப்பை நாம் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.

- இந்த மூன்று தலையாய ஒழுக்கங்களும் இன்றைய பாரத நாட்டின் தாட்டொழுக்கங்கள். இவ்வொழுக்கங் களை மனப்பூர்வமாக ஏற்று ஒழுகுபவர்களே,திருவள்ளுவர் கருத்துப்படி, இந்நாட்டின் உண்மையான குடிமக்கள் ஆவார்கன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/60&oldid=1276353" இலிருந்து மீள்விக்கப்பட்டது