பக்கம்:குறட்செல்வம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட் செல்வம் 73

அது குடகு மலையில் தோன்றியே தஞ்சையையும், திருச்சியையும் வந்து சேர்ந்தது. அதுபோலவே குற்றங் களுக்குரிய காரணங்கள் தோன்றும் இடம் வேறு. குற்றங்கள் விளங்கிப் புலனாகின்ற இடம் வேறு.

உண்மையை ஒத்துக்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள் பொய்யைத் தோற்றுவிக்கிறார்கள். நியாயமான உரிமை களை ஏற்று வழங்காதவர்கள் பொய்யினைத் தோற்றுவிக் கிறார்கள். மற்றவர்களுடைய மன உணர்ச்சிகளை மதித்து உடன்படவோ அல்லது மாற்றவோ சக்தி அற்றவர்கள் ஒடுக்கம் கொள்கையின் மூலம் பொய்யினைத் தோற்றுவிக் கிறார்கள். இவறிக் கூட்டிச் செல்வம் சேர்ப்பவர்கள்செல்வத்தின் பயனை மறைப்பதன் மூலம் கள்வர்களைத் தோற்றுவிக்கிறார்கள்.

அழிபசி தீர்க்கும் பொருள் வைப்புழித் தெரியாத புல்லறிவாளர்கள் களவினைத் தோற்றுவிக்கிறார்கள். மற்றவர்கள் அன்றாட வாழ்வுக்கே வறுமையில் ஆழ்ந்து அவலப்படும்பொழுது வளம்பல படைத்து ஆடம்பரமாக வாழ்பவர்கள் அழுக்காற்றினைத் தோற்றுவிக்கிறார்கள், பலர் துய்க்காதனவற்றைப் பலர் அறியத் துய்த்து மகிழ் கிறார்கள். அவாவினைத் தோற்றுவிக்கிறார்கள். ஆதிக்கம் செலுத்துபவர்கள் அடிமைத்தனத்தையும் வளர்ந்துழி அடங்காமையையும் தோற்றுவிக்கிறார்கள். -

இங்ங்னம் ஆய்வு செய்யின் குற்றங்களுக்குக் குற்றங் களை உடையோரும் குற்றங்களைச் செய்வோரும் மட்டுமே பொறுப்பினர் ஆகார். அவர்களோடு தொடர் புடைய மற்றவர்களுக்கும், குறிப்பாகச் சமுதாய அமைப் பிற்கும் நிறைய பொறுப்பும் பங்கும் உண்டு. இங்ங்னம்

கு—5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/75&oldid=1276371" இலிருந்து மீள்விக்கப்பட்டது