பக்கம்:குறட்செல்வம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸95

ஆளானான் என்ற செய்தியை அந்தத் தாய் கேட்டால். அவள் நிலை என்னாகும்?

துன்பத்தால் துடிதுடிப்பாள் - உணர்விழந்து ஊக்க மிழப்பாள். அவள் உள்ளமும் உடலும் கொதிகலனாக மாறும். இந்த நிலையில் அவளிடத்தில் எப்படி ஆக்க பூர்வமான செயற்பாட்டை எதிர்பார்க்க முடியும்? -

அதுபோல, நிலமகளும் ஓர் அன்னை. அவளுடைய மணிவயிற்றில் கோடானு கோடி மக்கன் தோன்றி வளர் கிறார்கள் - வாழ்கிறார்கள். இனிய பல நறுஞ்சுவை உணவுகளை ஊட்டி வளர்க்கிற நிலமகளாகிய அன்னை. தன்னுடைய மக்கள் அன்போடும், பண்போடும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதே திலடிகளின் விருப்பம். - - -

அதற்கு மாறாக, இவர்கள் தம்முள் மோதிப் பகை வளர்த்துச் கொண்டு, தம்முடைய வாழ்க்கையையும், உலகியல் வாழ்க்கையையும் களங்கப்படுத்துவதைக் கண்டும் கேட்டும் கலங்குகிறாள் - கவலை கொள்கி றாள். நிலவளம் வெப்பத்தன்மை அடைகிறது!

ஆறாத் துயரத்தில் நிலமகள் அழுந்துகின்றமையின் காரணமாக, நிலமகளின் வளம் குன்றும் என்பது திருவள்ளுவரின் கருத்து. 'குற்றமற்ற நிலையில் குறை விலாது வளம் சுருங்கும், புகழற்ற உடம்புகளை நில மகள் தாங்கும்பொழுது என்று குறிப்பிடுகிறார்.

இசையிலா யாக்கை என்று குறிப்பிட்டது, சிந்தனைக் குரிய செய்தி. உயிருடைய ஒருவன் அன்பு காட்டுவான்: அறஞ் செய்வான். புகழ்பட வாழ்வான். அஃதில்லையா னால், உயிரற்றவன் என்பது தெளிவு. இக்குறிப்பினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/97&oldid=1276391" இலிருந்து மீள்விக்கப்பட்டது