பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 61 - அவ்வுலகத்திற்குத் தகுதியானவர்களாக ஆவதுதானே அறிவுடையார்க்கு அழகு. அந்த ஆனந்த உலகிற்குள் இன்பம் துய்க்க நம்மை நாம் உயர்த்திக் கொள்வோமாக 11. இரந்து வாழும் ஈனம் குறளுக்குப் புதிய பொருள் என்று கூறிய உடனேயே குதர்க்கமாகப் பேசுபவர்களை, குரூரமாகப் பார்ப்பவர்களை, எதற்கிந்த வேண்டாத வேலை என்று எதார்த்தமாகப் பேசி எரிச்சலைத் தணித்துக் கொள்பவர்களையெல்ல்ாம் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு நிறையவே கிடைத்தது. குறளுக்குத்தான் எல்லோரும் பொருத்தமான பொருளைப் பிழிந்தெடுத்துத் தந்து விட்டார்களே பிறகென்ன புதிய பொருள் என்று பிரலாபிக்கிற தொனி எனக்குப் புரிகிறது. - மணலில் தோண்டுகிறோம்; நீர் சுரக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால், மேலும் கிடைக்கும் என்று முயற்சிப்பது தவறில்லையே! - முன்னே தோண்டியவர்களை, இந்த முயற்சி எப்படி ஊனப்படுத்தும் பேரைக் கெடுக்கும் என்பது எனக்குப் புரியவில்லை. அதை உங்களிடம் விட்டுவிட்டு என் முயற்சியைத் தொடர்கிறேன். - - முன்னோர்கள் பொருள் சொல்லியவை பொன் போல என்றால், என்பொருளானது, அதற்கு மெருகு ஏற்றுவது போல; மேன்மைப் படுத்துவது போல என்பதை வாசகர்கள் பலர் என்னைச்சந்திக்கும் போது பேசி,வரவேற்றது என்னை மேலும் சிந்திக்கத் தூண்டியது. சிந்தையும் அதனுள் ஒன்றிப் போய் விட்ட காரணத்தால், மேலும் என் ஆய்வு தொடர்கிறது. - இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து - கெடுக உலகு இயற்றி யான் (1062) - ★。 இவவுலகத்தைப் படைத்தவன், இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயர் வாழ்தலையன்றி இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின், அக்கொடியோன்