ஏழையர்க்கு ஈதல் வேண்டும். அதனல் புகழ் பெற்று வாழ்தல் வேண்டும். அந்தப் புகழ்தான் ஒரு வனது உயிர்க்கு ஊதியம், உயிர்க்குப் புகழல்லர்த் ஊதியம் வேறி ஒன்றும் இல்லை. " 96
- புகழ் வளர்வது போன்றே அதன் வளர்ச்சிக்கா: வாழ்வில் சில கேடுகளும் வளரும். அப்புகழ் நிலைப்
பதற்குச் சாக்காடும் நேரும். கேட்டையும் சாச் காட்டையும் புகழ்கருதி ஏற்பவர் வித்தகர். மற்ற எளியவர் ஏற்பது அரிது. . 97;
ஒரு செயலில் தலையிட்டு முன்வருபவர் அச் செயலில் புகழ் பெறுவதற்குரிய திறமையோடு முற் படுக. புகழுக்குரிய திறமை இல்லாதவர் ஒன்றில் தலையிடுவதைவிட வ ளாதிருத்தலே அவர்க்கும் மற்ற வர்க்கும் நன்று. . . . . 98
புகழ் பெருதவன் உடம்பு- மிக இழிவானது. குறையில்லாத விளைச்சலை வழங்கிவரும் வளமுட்ைப நிலமும் அவனைத் தாங்குவதால் உண்டாகும் தாழ் வால் விளைச்சலில் குன்றும். 99
வாழ்வில் பழிநேராமல் வாழ்பவரே உண்மை வாழ்க்கை வாழ்பவர். புகழ் பெருது வாழ்பவர் சிறந்த வாழ்வு வாழாதவர் ஆவார். - . - - 100,
40