ஆட்சித் தலைவன் ஒற்றரை அமைத்து அவரால் பகைவரது அன்றன்றைய நடவடிக்கைகளைத் தெரிதல் வேண்டும் தெரியாதவ்ன் ஆட்சி, வெற்றிகொள்வதற்கு வகையில்லாது போகும். 19 |
ஒற்றன் மறைவாகச் செய்யும் குற்றங்களே அததற் கேற்ற ம்றைவாகவே கேட்டும் கண்டும் அறிய வல்லவன் ஆக வேண்டும். கேட்டுக் கண்டவற்றை ஐயப்பாடு இல்லாமல் துணிந்து கொள்ளவேண்டும். 192
ஒர் ஒற்றன் கேட்டுக் கண்டு கொடுத்த கருத்தை எல்லாம் வேறு ஓர் ஒற்றளுல் மேலும் ஒற்றி அறிய வேண்டும். அறிந்து இரண்டையும் ஆய்ந்து உண்மை யைக் கொள்ளவேண்டும். 193
ஊக்கம் கையிலுள்ள செல்வமாகும். அச்செல் வத்தைத் தன்னைவிட்டு நீங்காமல் காத்துக்கொள்ள வேண்டும். கொண்டவர் பெற்ற பெருஞ்செல்வத்தை இழந்தாலும் இழந்து விட்டோமே என்று சோர்ந்து &EGUIRł3; LỆffL -i-. IT IT » 794
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடம் செல்வ மும் மேம்பாடும் அவன் இருக்கும் வழியை உசாவி அறிந்துகொண்டு சென்று சேரும். 195
30