பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 103

செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி, பெரு வரை நீழல் உகளும் நாடன் கல்லினும் வலியன் - தோழி 1வலியன் என்னது மெலியும், என் நெஞ்சே. பிலர் GD

77. வருந்தும் மருந்தும்

“உன் காதலன்தான் இரவு வந்து போகிருனே! பிறகு என்ன? ஏன் இப்படி மெலிந்து போகிறாய்? நெற்றி பசலே பாய்ந்து விட்டது. தோள்கள் நெகிழ்ந்து விட்டன. என்ன காரணம்?’ என்றாள் தோழி.

“அதை ஏன் என்னிடம் கேட்கிறாய்? அவரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டால் என்ன?’ என் ருள் அவள்.

இரவு நேரத்திலே அவன் வருகிருன். ஆனந்தமாயிருக் கிருள். திரும்பிச் செல்கிருன். போகிற வழி ஆபத்தானது. அதை நினைத்து வருந்துகிருள்.

‘நுதல் பசப்பு இவர்ந்து, திதலே வாடி, * * நெடு மென் பணத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து, இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் எனச் சொல்லின், எவன் ஆம் தோழி!. பல் வரிப் பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி, கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள் கல்மிசைக் கவியும் நாடற்கு, என் கல் மா மேனி அழி படர் நிலையே?

-மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனர்

78. போகிறேன்’ என்றாள் ; புலம்பினன்

தினப்புனத்திலே காவல் புரிகிருள் அவள். வந்து போகி ருன் அவன். இன்பமான பொழுது போக்கு.